டெங்கு விழிப்புணர்வு முகாம்

ராஜபாளையம், நவ.8: ராஜபாளையம் அன்னப்பராஜா மேனிலை பள்ளியில் மாணவர்களுக்கு டெங்கு விழிப்புணர்வு முகாம் நடந்தது. தாளாளர் கிருஷ்ணமூர்த்தி ராஜா தலைமை வகித்தார். தலைமையாசிரியர் ரமேஷ் முன்னிலை வகித்தார்.

நகராட்சி சுகாதார ஆய்வாளர்கள் சுதாகரன், வேலுமணி ஆகியோர் மாணவர்கள் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த செய்ய வேண்டிய பணிகளையும் வந்த பிறகு அதனை சமாளிப்பது குறித்தும் பேசினர். பிறகு ஆசிரியர்கள் மாணவர்கள் டெங்கு கொசு ஒழிப்பது குறித்த உறுதிமொழி எடுத்தனர்.

Related Stories: