கத்தியை காட்டி பணம் பறிக்க முயன்ற வாலிபர் கைது

ஈரோடு, நவ. 8: ஈரோடு பெரியார் நகரை சேர்ந்தவர் பாலசுப்பிரமணி (35). இவர் சமையல் கான்டிராக்டராக இருந்து வருகிறார். நேற்று முன்தினம் காலை காந்திஜி சாலையில் உள்ள ஒரு ஏடிஎம்.,மில் பாலசுப்பிரமணி பணத்தை எடுத்துக்கொண்டு வெளியே வந்த போது அங்கு நின்றிருந்த வாலிபர் ஒருவர் கத்தியை காட்டி மிரட்டி பணத்தை பறித்துக்கொண்டு தப்பியோடினார். பாலசுப்பிரமணி சத்தம் போட்டதையடுத்து பொதுமக்கள் தப்பியோடிய வாலிபரை மடக்கி பிடித்து மின்கம்பத்தில் கட்டி வைத்து உதைத்தனர். ஈரோடு டவுன் போலீசாருக்கு கொடுத்த தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வாலிபரை மீட்டு விசாரணை நடத்தினர். விசாரணையில் பிடிபட்ட வாலிபர் திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூரை சேர்ந்த ஆண்டியப்பன் மகன் வீரமணி (21) என தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வீரமணி மீது வழக்கு பதிவு செய்து, கைது செய்தனர்.

Related Stories: