அரவக்குறிச்சி, நவ. 2: அரவக்குறிச்சி அருகே கிணற்றில் இறங்கி வேலை செயஙத தொழிலாளி கூடையில் மேலே ஏறியபோது கயிறு அறுந்து விழுந்து பரிதாபமாக இறந்தார். கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி ஒன்றியம் சேந்தமங்கலம் மேல் பாகம் ஊராட்சியில் ஒரு தோட்டத்தில் உள்ள விவசாய கிணற்றில் இரண்டு மாதங்களாக கிணற்றை ஆழப்படுத்தும் வேலை நடைபெற்று வந்தது. திருப்பூர் மாவட்டம் பிள்ளைக்கவுண்டன் புதூரைச் சேர்ந்த ராஜா (65) என்பவர் அங்கேயே தங்கி வேலை செய்து வந்தார்.