அரவக்குறிச்சி அருகே பரிதாபம் கிணற்றில் இருந்து கூடையில் மேலே ஏறியவர் கயிறு அறுந்து விழுந்து சாவு

அரவக்குறிச்சி, நவ. 2: அரவக்குறிச்சி அருகே கிணற்றில் இறங்கி வேலை செயஙத தொழிலாளி கூடையில் மேலே ஏறியபோது கயிறு அறுந்து விழுந்து பரிதாபமாக இறந்தார். கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி ஒன்றியம் சேந்தமங்கலம் மேல் பாகம் ஊராட்சியில் ஒரு தோட்டத்தில் உள்ள  விவசாய கிணற்றில் இரண்டு மாதங்களாக கிணற்றை ஆழப்படுத்தும் வேலை நடைபெற்று வந்தது.   திருப்பூர் மாவட்டம் பிள்ளைக்கவுண்டன் புதூரைச் சேர்ந்த ராஜா (65)  என்பவர் அங்கேயே தங்கி வேலை செய்து வந்தார்.

இந்நிலையில் நேற்றுமுன்தினம் மாலை  இவர் சிறுநீர் கழிப்பதற்காக கிணற்றுக்குள் இருந்து மண் எடுத்து வரும் கூடையில் அமர்ந்து மேலே வந்தார். அப்போது எதிர்பாராத விதமாக கூடை அறுந்து கீழே விழுந்தது. கூடையில் உட்கார்ந்து  வந்த ராஜா பலத்த காயம் அடைந்தார். அவர் கோயம்புத்தூரில் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி நேற்று காலை உயிரிழந்தார். இது குறித்து அரவக்குறிச்சி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

Related Stories: