பொதுமக்கள் மகிழ்ச்சி க.புதுப்பட்டி பேரூராட்சியில் சுகாதாரப்பணி தீவிரம்

உத்தமபாளையம், நவ.1: க.புதுப்பட்டி பேரூராட்சியில் கொசுக்கள் உற்பத்தியாகாமல் தடுப்பதற்கான நடவடிக்கையில் சுகாதாரத்துறை அதிகாரிகள் தீவிரம் காட்டி வருகின்றனர். உத்தமபாளையம் அருகே க.புதுப்பட்டி பேரூராட்சியில் 15வார்டுகள் உள்ளன. இங்குள்ள அனைத்து வார்டுகளிலும்  சுகாதாரப்பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக சாக்கடைகள் தூர்வாருதல், பிளாஸ்டிக் பை அகற்றல், தேங்கிய தண்ணீர் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடக்கின்றன. இப்பணிகள் பேரூராட்சி செயல்அலுவலர் ஆண்டவர் தலைமையில் நடைபெறுகிறது. அனைத்து வார்டுகளுக்கும் நேரடியாக சென்று மக்களின் குறைகளைக் கேட்டு சுகாதாரப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதேபோல் அனைத்து வார்டுகளிலும் கொசுக்கள் உற்பத்தியாகாமல் தடுத்திட மருந்துக்ள அடிக்கப்பட்டு வருகின்றன.

Related Stories: