போடி, நவ.1: கொட்டக்குடி ஆற்றில் அரைகுறையாய் நிற்கும் போடி அகலரயில்பாதைப்பணியை விரைந்து முடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். போடியிலிருந்து மதுரை வரை 90 கி.மீ தூரம் குறுகிய ரயில்பாதை ஆங்கிலேயர் ஆட்சியில் அமைக்கப்பட்டது. தமிழக மற்றும் கேரளா மலைப்பகுதிகளில் விளையும் ஏலக்காய்,காப்பி, தேயிலை,மிளகு, மாங்காய், இலவு போன்ற நறுமணப்பொருட்களை இங்கிலாந்திற்கு கொண்டு செல்வதற்கு இந்த பாதை வழியே ரயில் இயக்கப்பட்டது. இந்த ரயில்பாதையில் போடி அருகே குரங்கணியிலிருந்து வரும் கொட்டக்குடி ஆற்றில் பல இடங்களில் ரயில் கடந்து செல்வதற்கு கல்பாலங்கள் அமைக்கப்பட்டன. கடந்த 1924ம் ஆண்டு துவங்கப்பட்ட ரயில் சேவை 96 ஆண்டுகளாக நடைபெற்றது. போடி அகலரயில்பாதைக்கப்படுவதாக கடந்த 2010ம் ஆண்டு இந்த ரயில்பாதைக்கு மூடுவிழா காணப்பட்டது. புதிய திட்டத்திற்கு மத்திய அரசு 75 சதவீத நிதியையும், 25 சதவீத நிதியை மாநில அரசு ஒதுக்க வேண்டும் என மத்திய அரசு தெரிவித்தது. ஆனால், மாநில அரசு நிதி ஒதுக்கவில்லை. இதனால் பணிகள் துவங்காமல் 5 ஆண்டுகளுக்கும் மேலாக முடங்கி விட்டது. அத்துடன் ஏற்கனவே இருந்த ரயில் பாதையையும் அறக்கப்பட்டு விட்டன.