தேவதானப்பட்டி, நவ.1: பெரியகுளம் பகுதியில் சாகுபடி செய்யப்பட்டுள்ள மக்காசோளப்பயிரில் புழுத்தாக்குதலை கட்டுப்படுத்த வேளாண்மை துறை அதிகாரிகள் ஆலோசனை தெரிவித்துள்ளனர். தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதியில் தற்போது இறவை பாசனம் மூலம் ஆங்காங்கு மக்காச்சோளம் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இந்த மக்காச்சோளப்பயிரில் படைப்புழுவின் தாக்குதல் காணப்படுகிறது. இந்த புழுக்களானது இலைகளின் அடிப்பகுதியில் சுரண்டி சேதத்தை உண்டு பண்ணும். இதனால் பச்சையம் இழந்து பயிர் வெண்மையாக காணப்படும். இளம் புழுக்கள் நூலிகளை உருவாக்குவதன் மூலம் ஒரு செடியில் இருந்து மற்றொரு செடிக்கு சென்று சேதத்தை உண்டு பண்ணும். இளம் செடிகளில் இலை உறைகளையும், முதிர்ந்த செடிகளில் கதிரின் நூலிழைகளையும் சேதப்படுத்தும். ஒரு இலை உறையினுள் இரண்டு, மூன்று புழுக்கள் வரை இருக்கும்.