திருமானூரில் இயற்கை முறையில் வேளாண் செயல் விளக்கம்

அரியலூர்,அக்,26: அரியலூர் மாவட்டம் திருமானூரில் விவசாயிகளுக்கு தந்தை ரோவர் வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி நிறுவனத்தின் மாணவிகள் வேளாண் செயல்விளக்கம் இயற்கை முறையில் செய்து காட்டினர்.

இதில் கல்லூரி மாணவிகள் இயற்கை முறையில் சில ஊட்ட ஊக்கிகளான பஞ்சகவ்யம், ஜீவாமிர்தம், அமிர்த கடைசல் போன்றவற்றையும் பூச்சிவிரட்டி கரைசல், 5 இலை பூச்சி விரட்டி, தசகாவ்யா போன்றவற்றையும் செயல் விளக்கம் செய்து காட்டினர், மேலும் அவர்கள் பொதுமக்களிடம் பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டு திட்டம் பற்றியும் அதன் முக்கியத்துவத்தையும் எடுத்துரைத்தனர்.

Related Stories: