பண்ருட்டி, அக். 16: கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே பி. ஆண்டிக்குப்பம் பகுதியை சேர்ந்தவர் கோவிந்தசாமி மகன் சத்தியநாதன் (27). சென்னையில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இவருக்கும் எலவத்தாடி பகுதியை சேர்ந்த ரம்யா (26) என்பவருக்கும் கடந்த 01.12.2016ல் திருமணம் நடந்தது. திருமணத்தின் போது ரம்யாவுக்கு 32 பவுன் நகைகள், ரூ.5 லட்சம் மதிப்புள்ள வீட்டு உபயோக பொருட்கள் உள்ளிட்டவை சீர்வரிசையாக கொடுக்கப்பட்டன. தொடர்ந்து எலவத்தடியில் குடும்பம் நடத்தி வந்த நிலையில் சத்தியநாதன் வாரம் ஒருமுறை மனைவியை பார்க்க வருவாராம். அப்போது கூடுதல் வரதட்சணையாக காரும், 10 பவுன் நகைகளும் தர வேண்டும் என ரம்யாவிடம் சத்தியநாதன், அவரது தந்தை கோவிந்தசாமி, தாயார் தமிழ்ச்செல்வி, தாய்மாமன் ஆசிரியர் இளவரசன் உள்ளிட்டோர் கேட்டு கொடுமைப்படுத்தி உள்ளனர்.
மேலும் ரம்யா உணவு கொடுக்காமல் சித்ரவதை செய்து வந்துள்ளனர். இதனால் ரம்யா தாய் வீட்டுக்கு சென்று காருக்கும், நகைகளுக்கும் என 10 லட்சம் ரூபாய் பணம் கொண்டு வந்து கொடுத்துள்ளார். அதன்பிறகும் ரம்யாவின் குடும்ப சொத்தில் அவருக்கு பாகம் பிரித்து தர வேண்டும் என்றும் சத்தியநாதன் குடும்பத்தினர் கொடுமைப்படுத்தி வந்துள்ளனர்.