முஷ்ணம், அக். 16: முஷ்ணத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி இந்தியன் வங்கி முன்பு ஆர்ப்பாட்டம் மற்றும் முற்றுகை போராட்டம் நடைபெற்றது. ஏஐடியுசி மாநில செயலாளர் விருதைகாந்தி தலைமை தாங்கினார். வட்ட செயலாளர் ராஜி முன்னிலை வகித்தார்.
கடலூர் மாவட்டத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிட வேண்டும். ரபேல் விமான பேர ஊழலுக்கு பொறுப்பேற்று பிரதமர் பதவி விலக வேண்டும். பெட்ரோல், டீசல் விலை உயர்வை திரும்ப பெற வேண்டும். முஷ்ணம் வட்டத்தில் தகுதியான அனைவருக்கும் முதியோர் உதவித்தொகை வழங்க வேண்டும். ஊரக வேலை திட்டத்தில் பணி செய்த பணியாளர்களுக்கு அரசு அறிவித்த ஊதியத்தை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர். முற்றுகையில் ஈடுபட்ட 24 பெண்கள், 27 ஆண்கள் உள்ளிட்ட 51 பேரை போலீசார் கைது செய்தனர்.