ராமநாதபுரம், அக்.16: ராமநாதபுரம் நகராட்சி, பெரியார் நகர் பகுதி மக்கள் நேற்று கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர். கலெக்டரிடம் அளித்த மனுவில், ‘‘பெரியார் நகரில் கரும்புக்கொல்லை, கூரிச்சாத்த அய்யனார் கோவில் தெரு ஆகிய பகுதிகளில் அரசு அலுவலர்கள், அரசு பொதுத்துறை ஊழியர்கள் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் 15 ஆண்டுகளுக்கும் மேலாக குடியிருந்து வருகிறார்கள். இந்த பகுதிகளில் குடிநீர் வசதி செய்து தர வேண்டி பல முறை மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. தெருவிளக்குகள் எரியாததால் இரவு நேரங்களில் பல வீடுகளில் திருட்டுச்சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. தெருவிளக்குகளை பராமரிக்க தனியாருக்கு விடப்பட்டதால் முறையாக பராமரிப்பதில்லை.