பரமக்குடி, அக்.16: பரமக்குடி அருகே எமனேஸ்வரம் பகுதியில் தினந்தோறும் சாலையை ஆக்கிரமித்து ரோட்டோர கடைகள் அமைக்கப்படுகின்றன. வெயிலை தடுப்பதற்காக மேல்பகுதியில் பிளாஸ்டிக்கால் ஆன மறைப்புகளை பயன்படுத்துகின்றனர். இவை சாலையின் முன்புறம் நீட்டிக் கொண்டு ஆக்கிரமித்துள்ளன. இதனால் வாகன ஓட்டிகள் இச்சாலையை பயன்படுத்த முடியவில்லை. நகராட்சி நிர்வாகத்தினர் சாலையை ஆக்கிரமிக்கும் வியாபாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.