மணப்பாறையில் சார்புநீதிமன்றம் அமைக்க பாஜக கோரிக்கை

மணப்பாறை, அக்.12:   மணப்பாறை அடுத்த வையம்பட்டியில் உள்ள தனியார் மண்டபத்தில் நேற்று பாஜக ஒன்றிய செயற்குழு கூட்டம் நடைபெற்றது. ஒன்றியத் தலைவர் சுப்ரமணி தலைமை வகித்தார். மணப்பாறை சட்டமன்ற அமைப்பளார் செந்தில் தீபக் மற்றும் நகுலன் முன்னிலை வகித்தனர். மாவட்ட தலைவர் மனோகர் ராஜன், கரூர் நாடளுமன்ற பொறுப்பாளர் சிவசாமி, கரூர் பாரளுமன்ற அமைப்பாளர் பார்த்திபன், திருத்தணி முன்னாள் எம்எல்ஏ ரவிராஜ் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் மணப்பாறை ஒன்றியம் கொட்டப்பட்டியில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைத்தல், மழைக்காலம் என்பதால் போர்க்கால அடிப்படையில் அனைத்து ஓட்டு கட்டிட பள்ளிகளிலும் உடனடியாக மராமத்து பணி செய்தல்,புத்தாநத்தம் போக்குவரத்து பகுதியில் கூடும் சந்தையை சந்தைக்கு உண்டான இடத்தில் சந்தை கூட நடவடிக்கை எடுத்தல் மற்றும் மணப்பாறையில் சார்பு நீதிமன்றம் அமைக்கவும் அரசை வலியுறுத்தி ஒன்றிய செயற்குழு கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

Related Stories: