திருச்சி,அக்.12: பாலக்கரை சங்கிலியாண்டபுரம் மகேந்திரன் மனைவி உமாமகேஸ்வரி (38). அதே பகுதியில் காலிமனை ஒன்றை சங்கரன்பிள்ளை ரோடு பகுதியை சேர்ந்த காளிதாஸ் என்பவர் மூலம் ரூ.8 லட்சத்திற்கு பெற்றதாகவும்,பணத்தை பின்னர் போலி ஆவணங்கள் தயாரித்து காலி மனையை விற்றது தெரியவந்தது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்ககோரி கன்டோன்மென்ட் குற்றப்பிரிவில் புகார் அளித்தார். காளிதாஸ் மீது நேற்று போலீசார் வழக்குபதிந்த விசாரிக்கின்றனர்.