வாண்டையார் பொறியியல் கல்லூரி அணி முதலிடம்

தஞ்சை, அக். 12: கும்பகோணத்தில் நடந்த மண்டல கபடி போட்டியில் வாண்டையார் பொறியியல் கல்லூரி முதலிடம் பிடித்தது. கும்பகோணத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தால் மண்டல அளவில் பொறியியல் கல்லூரிகளுக்கு இடையிலான கபடி போட்டி நடந்தது. இதில் பல்வேறு பொறியியல் கல்லூரிகள் பங்கேற்று விளையாடியது. இதில் பங்கேற்ற தஞ்சை வாண்டையார் பொறியியல் கல்லூரி அணி முதலிடம் பிடித்தது. தொடர்ந்து 4வது முறையாக மண்டல அளவில் முதலிடத்தை பிடித்து கோப்பையை தக்க வைத்துள்ளனர். முதலிடம் பிடித்த வாண்டையார் பொறியியல் கல்லூரி கபடி அணி மாணவர்களை கல்லூரி தலைவர் குணசேகர வாண்டையார், தாளாளர் விஜயபிரகாஷ், கல்லூரி முதல்வர் அம்புஜம் ஆகியோர் பாராட்டினர். மாணவர்களை உதவி பேராசிரியர் காமராஜ், உடற்கல்வி இயக்குனர் பாலாஜி ஆகியோர் வழிநடத்தினர். இந்த வெற்றியின் மூலம் மாநில அளவிலான போட்டிக்கு வாண்டையார் பொறியியல் கல்லூரி தேர்வு பெற்றுள்ளது.

Related Stories: