ஆத்தூர், அக்.11: ஆத்தூர் அரசு மருத்துவமனையில் நோயாளிகள் வசதிக்காக ரூ14 லட்சத்தில் வழங்கப்பட்ட 2 டயாலிசிஸ் கருவிகள், பயன்படுத்தப்படாமல் 3 மாதமாக கிடப்பில் போடப்பட்டுள்ளது. ஆத்தூர் அரசு மருத்துவமனையில் நாள்தோறும் சிகிச்சை பெறுவதற்காக, சுற்றுவட்டார கிராமங்களை ேசர்ந்த 500க்கும் மேற்பட்டோர் வந்து செல்கின்றனர். இந்நிலையில் கடந்த 3 மாதத்துக்கு முன், ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு வரும் கிட்னி பாதித்த ேநாயாளிகள் வசதிக்காக, கள்ளக்குறிச்சி அதிமுக எம்.பி காமராஜ், தனது தொகுதி மேம்பாட்டு நிதி ரூ14 லட்சத்தை ஒதுக்கியதில், 2 டயாலிசிஸ் கருவிகள் வாங்கப்பட்டது. ஆனால் இந்த கருவிகள், இதுவரை பயன்பாட்டிற்கு கொண்டு வராமல் கிடப்பில் போட்டு வைத்துள்ளனர். இதையறிந்த எம்பி காமராஜ், நேற்று ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு நேரில் சென்று ஆய்வு செய்தார்.