வெளிநாட்டு வேலை வாங்கி தருவதாக ரூ.3.30 லட்சம் மோசடி: 3 பேர் மீது

வழக்குதிருச்சி, அக். 11: திருச்சி தென்னூர் சின்னசாமி நகரை சேர்ந்த முத்தாள் என்பவர் திருச்சி ஜேஎம் 4 நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், தனது மகன் மற்றும் உறவினர் ஒருவருக்கும் மலேசியாவில் வேலை வாங்கி தரும்படி அரியலூர் மாவட்டம் ஜெயங்ெகாண்டத்ைத சேர்ந்த லோகநாதன், தீபா, தேவேந்திரன் ஆகியோரிடம் ரூ.3.30 லட்சம் பணம் கொடுத்ததாகவும், பணத்தை பெற்றவர்கள் வேலை வாங்கி தராமல் ஏமாற்றியதாகவும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க போலீசுக்கு உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார். மனுவை விசாரித்த மாஜிஸ்திரேட் விசாரித்து நடவடிக்ைக எடுக்க உத்தரவிட்டார். இதையடுத்து திருச்சி மாநகர குற்றப்பிரிவு போலீசார் வழக்குபதிந்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: