சபரிமலை தீர்ப்புக்கு எதிர்ப்பு சரண கோஷம் எழுப்பி ஆர்ப்பாட்டம்

திருச்சி, அக்.11: சபரிமலை தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து திருச்சியில் நேற்று சரணகோஷம் எழுப்பி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டன. சபரிமலை ஐயப்பன் கோயிலில் பாரம்பரியத்தை காக்க தவறி, 10 வயது முதல் 50வயது வரையுள்ள பெண்களும் சபரிமலைக்கு செல்லலாம் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு கடும் கண்டனம் தெரிவித்தும், தீர்ப்பை திரும்ப பெற வேண்டியும் ஆர்.எஸ்.எஸ், இந்து முன்னணி யினர் திருச்சி சிந்தாமணி அண்ணாசிலை அருகே நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்எஸ்எஸ் மாவட்ட தலைவர் செல்லத்துரை தலைமையில் செயலாளர் செல்வம், நிர்வாகிகள் தங்க.ராஜையன், சரவணன், இல.கண்ணன், நடராஜன், ராஜசேகரன், சிட்டி பாபு, பாண்டியன் உள்பட ஏராளமனோர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் அனைவரும் சரணகோஷம் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: