ஜாக்டோ ஜியோ மாநாட்டில் மருந்தாளுநர் சங்கம் பங்கேற்கும்

திருத்துறைப்பூண்டி, அக்.11:  ஜாக்டோ ஜியோ மாநாட்டில் மருந்தாளுநர் சங்கம் பங்கேற்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு அனைத்து மருந்தாளுநர் சங்கம் திருவாரூர் மாவட்டத் தலைவர் மணிவண்ணன், மாவட்ட செயலாளர் தியாகராஜன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது: ஜாக்டோ ஜியோவின் சார்பில் சேலத்தில் வரும் 13ம் தேதி நடைபெறும் வேலைநிறுத்த ஆயத்த மாநாட்டிலும், வரும் 27ம் தேதி முதல் நடைபெறும் காலவரையற்ற வேலைநிறுத்தத்திலும் மாவட்டத்திலுள்ள அனைத்து துறைகளிலும் பணிபுரியும் மருந்தாளுநர்களும் பங்கேற்க உள்ளார்கள்.

Related Stories: