ஒரத்தநாடு, அக். 11: ஒரத்தநாடு அருகே ஆடு மேய்க்கும் தகராறில் விவசாயியை சரமாரியாக அரிவாளால் வெட்டிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
ஒரத்தநாடு அருகே ஒக்கநாடு கீழையூர் பகுதியில் உள்ள வயலில் திருச்சி லால்குடி அருந்ததியர் தெருவை சேர்ந்த கணேசன் மகன் முத்தையா (27) என்பவர் ஆட்டு பட்டி அமைத்து 100க்கும் மேற்பட்ட செம்மறி ஆடுகளை மேய்த்து வருகிறார். இதே பகுதியில் ராமநாதபுரம் முதுகுளத்தூரை சேர்ந்த மூர்த்தி (49), திருவாரூர் மாவட்டம் குடவாசலை சேர்ந்த பிரபாகரன் (23) ஆகியோரும் தனித்தனியாக பட்டி அமைத்து ஆடு மேய்த்து வருகின்றனர். பிரபாகரனும், மூர்த்தியும் இணைந்தும், முத்தையா தனியாகவும் ஆடு மேய்ப்பது வழக்கம். இரவு நேரங்களில் 3 பேரின் ஆடுகளும் பட்டி மாறி அடைந்துவிடும். இதனால் முத்தையாவுக்கும், மூர்த்தி, பிரபாகரன் தரப்பினருக்கும் அடிக்கடி தகராறு ஏற்படும்.