கூலிப்படையை சேர்ந்த வாலிபர் கைது மாட்டு வியாபாரி கொலை வழக்கில்

வாலாஜா, அக்.10: ராணிப்பேட்டை மாட்டு வியாபாரி கொலை வழக்கில் கூலிப்படையே சேர்ந்த வாலிபரை நேற்று போலீசார் கைது செய்தனர்.  ராணிப்பேட்டை மாட்டு வியாபாரி ஆஷிப்அக்பர்(31) கடந்த மாதம் 7ம் தேதி கொலை செய்யப்பட்டார். இது சம்பந்தமாக அவருடைய மனைவி ரிகானா பேகம் கள்ளக்காதலன் காலித் அகமது மற்றும் கூலிப்படையை சேர்ந்த 5 பேர் ஏற்கனவே கைது செய்யபட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர்.இந்நிலையில் கூலிப்படையை சேர்ந்த வாலாஜா அம்பேத்கர் நகரை சேர்ந்த சின்னகுட்டி(22) என்பவரை தேடி வந்தனர். இதையடுத்து, நேற்று போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்குள்ள பஸ் நிலையம் அருகே சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த வாலிபரை மடக்கி பிடித்து விசாரித்தனர். விசாரணையில் மாட்டு வியாபாரி கொலை வழக்கில் தேடப்படும் சின்னகுட்டி என்பது தெரியவந்தது. பின்னர், போலீசார் அவரை கைது செய்தனர்.

Related Stories: