ஊத்துக்கோட்டை, செப். 21: சென்னை அமைந்தகரையை சேர்ந்தவர் அபுபக்கர் (45), ரியல் எஸ்டேட் அதிபர். இவர், கடந்த 17ம் தேதி தனது காரில் ₹9 லட்சத்துடன், பெரியபாளையம் பிடிஓ அலுவலகத்திற்கு வேலை தொடர்பாக சென்றார். அப்போது, பெரியப்பாளையம் பஜார்பகுதியில் அவர் தனது காரை நிறுத்திவிட்டு, அங்குள்ள ஜெராக்ஸ் கடைக்கு சென்றுள்ளார். சிறிது நேரம் கழித்து திரும்பி வந்தபோது, காரில் இருந்த பணத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரிந்து. இதுகுறித்த புகாரின் பேரில் பெரியப்பாளையம் போலீசார் விசாரிக்
கின்றனர்.