வலங்கைமான். செப்.19: வலங்கைமான் தாலுகாவில் உள்ள கால்நடைகளுக்கு 15வது சுற்று கோமாரிநோய் தடுப்பூசி போடும் முகாம் 5 குழுக்களாக கடந்த 1ம் தேதி முதல் வரும் 21ம் தேதி வரை நடைபெறுகின்றது. திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் தாலுகாவில் உள்ள 50 கிராம ஊராட்சிகளில் சுமார் 16 ஆயிரம் மாடுகள் உள்ளன. இவைகளுக்கு 15வது சுற்று கோமாரிநோய் தடுப்பூசி போடும் முகாம் கால்நடை உதவி மருத்துவர்கள், 2 கால்நடை ஆய்வாளர்கள் தலைமையில், கால்நடை உதவியாளர்கள் ஆகியோரை உள்ளடக்கிய 5 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.