ஆர்.எஸ்.மங்கலம், செப். 19: ஆர்.எஸ்.மங்கலம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கால்நடைகளால் அதிகமான விபத்துக்கள் ஏற்படுகிறது. இதனால் வாகன ஒட்டிகள் அவதியடைந்து வருகின்றனர்.ஆர்.எஸ்.மங்கலம், திருவாடானை ஆகிய தாலுகாவிற்கு உட்பட்ட பகுதிகளில் ஆடு, மாடு, நாய் போன்றவற்றால் ஏராளமான விபத்துக்கள் நடைபெறுகிறது. இதனால் உயிர் சேதமும், பொருள் சேதமும் ஏற்படுகின்றது. ஆடு, மாடுகளை வளர்பவர்கள் அதனை சரியாக பராமரித்து வீடுகளில் கட்டாமல் விட்டு விடுகின்றனர். இவைகள் இரவு, பகல் எந்த நேரத்திலும் ரோடுகளில் படுத்து இருப்பதும், குறுக்கும் நெடுக்காக ஓடுவதாலும் டூவீலர்களில் வருபவர்கள் ஏராளமானோர் விபத்தில் சிக்கி வருகின்றனர்.