மூளை வளர்ச்சி குன்றிய சிறுமி பலாத்காரம்

கூடுவாஞ்சேரி, செப்.19:  கூடுவாஞ்சேரி அருகே ஊரப்பாக்கம் அடுத்துள்ளது கிராமத்தை சேர்ந்தவர் குமரன்.  இவரது மனைவி கனகா. இவர்களுக்கு ஒரு மகன், குமுதா (16) என்ற மகள்  உள்ளனர். (அனைவரின் பெயரும் மாற்றப்பட்டுள்ளன). சிறுமி குமுதா மூளை வளர்ச்சி குறைபாடு உள்ளவர்.

கடந்த 6 ஆண்டுகளுக்கு முன் கணவன், மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு குமரன், கனகாவை பிரிந்து சென்றார். பின்னர் கனகா, கூலி வேலை ெசய்து, பிள்ளைகளை காப்பாற்றி வருகிறார். கடந்த சில நாட்களாக சிறுமி குமுதா, உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்தார்.

இதனால், அவரது தாய் மருத்துவமனைக்கு அழைத்து சென்று பரிசோதனை செய்தபோது, அவள் 5 மாத கர்ப்பமாக இருப்பதை அறிந்து அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து, கூடுவாஞ்சேரி போலீசில் புகார் செய்யப்பட்டது. எஸ்ஐ மகிதஅன்னகிருஷ்டி வழக்குப்பதிவு  செய்து விசாரித்தார்.

அதில், மூளை வளர்ச்சி குன்றிய சிறுமியை அதே பகுதியை சேர்ந்த 6 பேர் பாலியல் பலாத்காரம் செய்தது தெரிந்தது. இதையடுத்து, அதே பகுதியை சேர்ந்த பரமசிவம்  (61), சிதம்பரம் (45), சங்கர் (43) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மேலும் போலீசார், தலைமறைவாக உள்ள 3 பேரை தேடி வருகின்றனர்.

Related Stories: