கொலை வழக்கில் 3 வாலிபர்கள் கைது

புழல்,  செப். 19: செங்குன்றம் எடைப்பாளையம் ஏரிக்கரையை சேர்ந்தவர் ராகுல் (26), பிரபல கொள்ளையன். இவரை  போலீசார் தேடி வந்தனர்.

இந்நிலையில், கடந்த 15ம் தேதி நள்ளிரவு 12 மணிக்கு எடைப்பாளையம் தந்தை பெரியார் தெருவில் ராகுல் நடந்து சென்றபோது 2 பைக்கில் வந்த 6 பேர், ராகுலை சுற்றிவளைத்து அரிவாளால் சரமாரியாக வெட்டினர். ராகுல் ரத்த வெள்ளத்தில் சரிந்தார். ஆனாலும், ஆத்திரம் தீராத கும்பல், அவரது கழுத்தை அறுத்துவிட்டு அங்கிருந்து தப்பியது.

தகவலறிந்து சோழவரம் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து ராகுலின் சடலத்தை கைப்பற்றி பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்கு பதிந்து முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடந்ததா அல்லது வேறு காரணமா என விசாரணை நடத்தி வந்தனர்.இந்நிலையில், இந்த வழக்கில் தொடர்புடைய எடைப்பாளையம் கிருஷ்ணா நகர் 4வது தெருவை சேர்ந்த மாதவன் (28), அதே பகுதியை சேர்ந்த பிரசன்னா (27), பாடியநல்லூர் மூர்த்தி நகரை சேர்ந்த அப்பு (எ) சாயின்ஷா (24) ஆகிய மூவரை போலீசார் நேற்று கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: