தெற்கு மாவட்ட திமுக சார்பில் புதுகையில் 18ம் தேதி ஆர்ப்பாட்டம்

புதுக்கோட்டை, செப்.12:   புதுக்கோட்டையில் தெற்கு மாவட்ட திமுக சார்பில் நேற்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் எம்எல்ஏ ரகுபதி தலைமை வகித்தார். எம்எல்ஏ மெய்யநாதன் முன்னிலை வகித்தார். இந்த ஆலோசனை கூட்டத்தில் திமுக தலைவராக பதவி ஏற்ற ஸ்டாலினுக்கு புதுக்கோட்டை தெற்கு மாவட்ட திமுக சார்பில் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்வது, ஊழல் அதிமுக அமைச்சர்கள் மற்றும் அரசுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் வரும் 18ம் தேதி நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் கலந்துகொள்ள வேண்டும். வாக்களர் பட்டியலில் போலி வாக்காளர்களை நீக்கவும், விடுபட்ட வாக்காளர்களை சேர்க்கவும் கட்சி நிர்வாகிகள் அந்தந்த பகுதியில் முறையான பணியை மேற்கொள்ள வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இந்த கூட்டத்தில் முன்னாள் எம்எல்ஏக்கள் கவிதைபித்தன், உதயசண்முகம் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

Related Stories: