தொட்டிலில் இருந்து தவறிவிழுந்து 3 மாத குழந்தை பரிதாப சாவு

நெய்வேலி, செப். 12:நெய்வேலி அருகே தொட்டிலில் இருந்து தவறிவிழுந்து 3 மாத குழந்தை பரிதாபமாக இறந்தது. கடலூர் மாவட்டம் நெய்வேலி அடுத்த வீரட்டிக்குப்பம் நடுத்தெருவை சேர்ந்தவர் கலியன் மகன் மணிகண்டன் (30), கூலித்தொழிலாளி. இவரது மனைவி கற்பகம் (எ) ராசாத்தி (25). நேற்று முன்தினம் இவர்களது 3 மாத குழந்தையை, வீட்டில் சேலையால் தொட்டில் கட்டி அதில் போட்டு விட்டு ராசாத்தி தோட்டத்துக்கு சென்று விட்டார். மீண்டும் வீட்டுக்கு திரும்பிய போது தொட்டிலில் போட்டுவிட்டு சென்ற குழந்தை அதிலிருந்து கீழே விழுந்து இறந்து கிடந்ததை பார்த்து கதறி அழுதார். சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிச்சென்று ராசாத்தியை சமாதானப்படுத்தினர். தகவலறிந்த ஊமங்கலம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். தொட்டில் கட்டிய சேலையில் சிறிய ஓட்டை இருந்ததால் அதன்வழியே குழந்தை வெளியேற முயன்று பின்னர் கீழே விழுந்து இறந்திருக்கலாம் என தெரியவந்துள்ளது.  இதுகுறித்து மணிகண்டன் ஊமங்கலம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: