தற்கொலை செய்த பெண்ணின் நகையை திருடிய டிரைவர் கைது

கம்பம், செப். 11: கம்பத்தில் குழந்தைகளைக் கொன்று தற்கொலை செய்துகொண்ட பெண்ணின் தங்கநகையை திருடிய தனியார் ஆம்புலன்ஸ் டிரைவரை போலீசார் கைது செய்தனர்.கம்பத்தில் நேற்று முன்தினம் இரண்டு குழந்தைகளை கொன்றுவிட்டு போலீஸ்காரர் மனைவி ஜெயமணி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியது.இந்நிலையில் இறந்த ஜெயமணியின் உடலை ஆம்புலன்ஸில் டிரைவர் ஏற்றி சென்றார். அப்போது அவர், ஜெயமணியில் கழுத்தில் இருந்த ஒரு பவுன் தங்க நகையை திருடி உள்ளார்.இதனை அங்கிருந்த ஜெயமணியின் உறவினர்கள் பார்த்து அவரை பிடித்து அடித்து உதைத்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் அவர் கம்பம் நந்தகோபாலன் கோவில் தெருவைச்சேர்ந்த வைரவன் மகன் சிவக்குமார்(42) என்பதும் இவர் சிவா ஆம்புலன்ஸ் என்ற பெயரில் தனியார் ஆம்புலன்ஸ் சர்வீஸ் நடத்தி வருவதும் தெரிய வந்தது. பிரேதத்தில் இருந்த தங்க செயினை திருடிய சிவக்குமாரை கம்பம் தெற்கு எஸ்.ஐ முனியம்மாள் வழக்குபதிவு செய்து கைது செய்தாா்

Related Stories: