உலக எழுத்தறிவு தினவிழா

புதுக்கோட்டை, செப்.11: தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் திருவப்பூர் நகராட்சி உயர்நிலைப்பள்ளியில் உலக எழுத்தறிவு தினம் கொண்டாடப்பட்டது. தலைமை ஆசிரியை தனலெட்சுமி தலைமை வகித்தார். உலக எழுத்தறிவு தினத்தையொட்டி நடைபெற்ற பேச்சுப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. தொடர்ந்து தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநில செயற்குழு உறுப்பினர் பிரபாகரன், மாவட்ட தலைவர் மணவாளன் ஆகியோர் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் செயல்முறைகள் குறித்து பேசினர். இதில் மாவட்ட செயலாளர் வீரமுத்து உள்பட பலர் கலந்து கொண்டனர். உதவி தலைமை ஆசிரியை முத்துலெட்சுமி வரவேற்றார். பட்டதாரி ஆசிரியர் ஆஷாக்கனி நன்றி கூறினார்.

Related Stories: