சேலம் தாதகாப்பட்டியில் கல்லூரி மாணவன் விஷமருந்தி தற்கொலை

சேலம், செப்.9:சேலம் தாதகாப்பட்டி திருஞானம் நகரை சேர்ந்தவர் மோகன்குமார். இவரது மகன் விவேகானந்தன் (20). நாமக்கல்லில் உள்ள தனியார் கல்லூரியில் பிஎஸ்சி 3ம் ஆண்டு படித்து வந்தார். இவர் நேற்று காலை, தனது வீட்டில் தென்னை மரத்திற்கு அடிக்க வைத்திருந்த பூச்சி மருந்தை எடுத்து குடித்துள்ளார். பின்னர், தனது நண்பர்களிடம் விஷம் குடித்ததை போனில் கூறியுள்ளார். அவர்கள், மோகன்குமாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். வீட்டிற்கு வந்து பார்த்தபோது, மயங்கிய நிலையில் விவேகானந்தன் கிடந்துள்ளார். அவரை மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுபற்றி அன்னதானப்பட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Related Stories: