ஸ்ரீ விகாசா கல்லூரியில் ஆசிரியர் தின விழா

உத்தமபாளையம், செப்.7: உத்தமபாளையம் ஸ்ரீவிகாசா பிஎட் கல்லூரியில் ஆசிரியர் தினவிழா கொண்டாடப்பட்டது. உத்தமபாளையம் ஸ்ரீவிகாசா பிஎட் கல்லூரியில் ஆசிரியர் தின விழா தாளாளர் இந்திரா உதயகுமார் தலைமையில் நடந்தது. நிர்வாக அலுவலர் கிருஷ்ணமூர்த்தி வரவேற்றார். ஆசிரியா தின நோக்கம் பற்றி முதல்வர் மகாலட்சுமி விளக்கினார். சிறப்பு விருந்தினராக உத்தமபாளையம் கல்வி மாவட்ட கல்வி ஆய்வாளர் திருப்பதி கலந்து கொண்டு பேசினார். ஆசிரியர் தினம் பற்றி விரிவாக எடுத்துரைத்த பின்பு ராதாகிருஷ்ணன் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது. இதில் ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: