குல்காம் : ஜம்மு-காஷ்மீரின் குல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பஞ்சாயத்து தலைவர் உயிரிழந்துள்ளார். ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து கடந்த ஆண்டு ஆகஸ்ட் 5 ஆம் தேதி ரத்து செய்யப்பட்டது. அம்மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாகவும் மத்திய அரசு பிரித்தது. சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு நேற்றோடு ஒரு ஆண்டு நிறைவு அடைந்தது. இதனால், அங்கு அசம்பாவித சம்பவங்களை பயங்கரவாதிகள் நிகழ்த்தக்கூடும் என்பதால் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நிலையில், குல்காமில் பஞ்சாயத்து தலைவர் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.