கரீம் நகர்: தெலுங்கானா மாநிலத்தில் கல்லூரி மாணவியிடம் தகாத முறையில் நடந்து கொண்ட பேராசிரியரை மாணவர்கள் அடித்து துவைத்ததால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. தெலுங்கானாவில் தேர்வறையில் மாணவியிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாக கூறி உதவி பேராசிரியரை மாணவர்கள் துரத்தி சென்றுப் பிடித்து சரமாரியாக தாக்கினர். தெலுங்கானாவில் கரீம் நகர் மாவட்டத்தில் திம்மாபூரில் ஸ்ரீ சைதன்யா பொறியியல் கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியில் சுமார் 1000க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்நிலையில் அந்த கல்லூரியில் நேற்று துணைத் தேர்வுகள் நடைபெற்றுள்ளது. அப்போது கல்லூரி ஆய்வகத்தில் உதவி பேராசிரியராக பணிபுரியும் வெங்கடேஷ் என்பவர் மாணவி ஒருவரிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாக கூறப்படுகிறது.