வருசநாடு, ஏப். 20:கடமலை-மயிலை ஒன்றியத்தில் உள்ள கண்மாய் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என பொதுமக்கள், விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். கடமலை-மயிலை ஒன்றியத்தில் உள்ள கண்டமனூர் புதுக்குளம் கண்மாய், செங்குளம் கண்மாய், கெங்கன்குளம், கோவிலாங்குளம், சிறுகுளம் கண்மாய், கடமான்குளம் கண்மாய், பெரியகுளம் கண்மாய், சாந்தனேரி கண்மாய் உள்ளிட்ட 12க்கும் மேற்பட்ட கண்மாய்கள் பொதுப்பணித்துறை மற்றும் ஊராட்சி ஒன்றியத்தின் கட்டுப்பாட்டில் உள்ளன. இந்த கண்மாய்களில் தனி நபர்கள் ஆக்கிரமித்து தென்னை, கொட்டை முந்திரி ,இலவமரம் உள்ளிட்ட விவசாயம் செய்கின்றனர். இந்த கண்மாய் ஆக்கிரமிப்புகளை அகற்ற விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் சார்பில் அரசுக்கு தொடர்ந்து கோரிக்கை விடுத்தும் இதுவரை நடவடிக்கை இல்லை என புலம்புகின்றனர்.