கொடைக்கானலில் தொடர் மழை விவசாயிகள் மகிழ்ச்சி

கொடைக்கானல், ஏப். 15: கொடைக்கானலில் தொடர் கோடை மழை காரணமாக விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். கொடைக்கானலில் கடந்த 4 நாட்களாக தொடர்ந்து கோடை மழை பெய்து வருகிறது. இதனால் கொடைக்கானலில் நிலவி வந்த வெப்பம் குறைந்து குளிர் சீதோஷ்ண நிலை ஏற்பட்டுள்ளது.  கொடைக்கானல் பகுதியின் குடிநீர் ஆதாரங்களுக்கு நீர்வரத்து ஏற்பட்டிருப்பதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இதேபோல் கொடைக்கானல் மேல்மலை பகுதியில் வெள்ளைப்பூண்டு, கேரட், உருளைக்கிழங்கு, முட்டைகோஸ் உள்ளிட்ட பயிர்களுக்கு இந்த மழை ஏதுவாக உள்ளது. இதனால் விவசாயிகளும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். மேலும் கொடைக்கானல் சுற்றுலா வருவதற்கு கட்டுப்பாடுகள் ஏதும் இல்லாத காரணத்தினால் நாள்தோறும் அதிக அளவிலான சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியுடன் வந்து செல்கின்றனர்.

Related Stories: