அன்னதானம் வழங்கல்

வத்தலக்குண்டு, ஏப். 15: அம்மையநாயக்கனூர் பஸ்நிலையம் அருகே அம்பேத்கர் பிறந்தநாள் விழா நடந்தது. அம்பேத்கர் மக்கள் இயக்கம் சார்பில் நடந்த இந்நிகழ்ச்சிக்கு நிலக்கோட்டை தாலுகா தலைவர் கணேன், தாலுகா செயலாளர் கணேசன், நிர்வாகிகள் ஜீவரத்தினம், பாலசுப்பிரமணி, சடையாண்டி, பெருமாள் உள்பட பலர் கலந்து கொண்டனர். அம்பேத்கர் படத்திற்கு மாலையணிவித்து மரியாதை செலுத்தி, வீரவணக்கம் கோஷங்கள் எழுப்பினர். தொடர்ந்து 100க்கும் மேற்பட்டோருக்கு உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டது.

Related Stories: