திண்டுக்கல், ஜன. 26: ஏலச்சீட்டு நடத்திய மோசடி செய்ததாக திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் அரசு பள்ளி ஆசிரியர்கள் உள்பட 3 பேர் மீது புகார் மனு அளித்தனர். திண்டுக்கல் அருகே வக்கம்பட்டியை சேர்ந்தவர் மோசஸ். அரசு பள்ளி ஆசிரியர். மோசஸ், தன்னுடன் பணிபுரியும் ஆசிரியை வளர்மதி, தனது தம்பி ஆகியோருடன் சேர்ந்து கடந்த 1995ம் ஆண்டு முதல் ஏலச்சீட்டு நடத்தி வந்தார். இவர்களிடம் வக்கம்பட்டியை சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் ரூ.1 லட்சம் முதல் ரூ.8 லட்சம் வரை ஏலச்சீட்டு போட்டனர்.