சென்னை வேகமெடுக்கும் கொரோனா பாதிப்பு!: சென்னையில் சிறப்பு குழந்தைகள் காப்பகத்தில் 8 ஊழியர்கள் உட்பட 75 பேருக்கு தொற்று உறுதி..!! May 18, 2021 சென்னையில் சிறப்பு குழந்தைகள் தங்கவைக்கப்பட்டுள்ள தனியார் காப்பகத்தில் 8 ஊழியர்கள் உட்பட 75 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. தினந்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் கொரோனாவுக்கு இலக்காகி வருகின்றனர். உயிரிழப்பும் உயர்ந்துகொண்டே செல்கிறது. நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பால் மருத்துவமனைகள் நிரம்பி வழிவதால் பலர் வீடுகளிலேயே தனிமை படுத்தி கொண்டுள்ளனர். இந்நிலையில், சென்னையில் சிறப்பு குழந்தைகள் காப்பகத்தில் 75 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. கீழ்ப்பாக்கம் ஹால்ஸ் ரோடு பகுதியில், சிறப்பு குழந்தைகளுக்கு என தனியார் காப்பகம் ஒன்று இயங்கி வருகிறது. இங்கு 10 வயது சிறுவர்கள் முதல் 30 வயது இளைஞர்கள் வரை மொத்தம் 172 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர். 8 ஊழியர்கள் மூலம் சிறப்பு குழந்தைகள் அனைவரும் பராமரிக்கப்பட்டு வருகின்றனர். கடந்த சனிக்கிழமை அங்குள்ள அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 8 ஊழியர்கள் உட்பட 75 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து அவர்கள் அனைவரும் காப்பகத்தின் உள்ளேயே தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. காப்பகத்தில் தமிழ்நாடு திறந்தவெளி பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் ஆசிரியர் பயிற்சி உள்ளது. இதில் பாடம் நடத்த வரும் ஆசிரியர் ஒருவர் மூலமே கொரோனா பரவி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. … The post வேகமெடுக்கும் கொரோனா பாதிப்பு!: சென்னையில் சிறப்பு குழந்தைகள் காப்பகத்தில் 8 ஊழியர்கள் உட்பட 75 பேருக்கு தொற்று உறுதி..!! appeared first on Dinakaran.
பழவேற்காடு – காட்டுப்பள்ளி இடையே உள்ள சாலையில் மீண்டும் கடல் சீற்றத்தால் மணல் திட்டுகள்: வாகன ஓட்டிகள் அவதி பாலம் அமைத்து தர கோரிக்கை
அதிமுக ஆட்சியில் நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில் அம்மா உணவக ஊழியர்களுக்கு 8 ஆண்டுக்கு பின் ஊதிய உயர்வு: சென்னை மாநகராட்சி நடவடிக்கை; பொதுமக்கள் பாராட்டு
தமிழ்நாடு யாதவ மகாசபை செயற்குழுவில் யாதவ மாணவர்களுக்கு யுபிஎஸ்சி, டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு பயிற்சி அளிக்க ரூ.10 லட்சம் நிதியுதவி: மாநில தலைவர் நாசே ராமச்சந்திரன் வழங்கினார்
2ம் கட்ட மெட்ரோ ரயில் நிலையங்களில் மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் வசதிகள் இருக்கும்: ஐகோர்ட்டில் தமிழக அரசு தகவல்
தி.நகர் சட்டமன்ற தொகுதியில் குடிநீர் பிரச்னைக்கு விரைவில் தீர்வு: ஜெ.கருணாநிதி எம்எல்ஏ கேள்விக்கு அமைச்சர் கே.என்.நேரு பதில்
சென்னையில் குடிநீர் விநியோக அளவு மற்றும் தரத்தை மேம்படுத்த நாளை முதல் கணக்கெடுப்பு பணி: குடிநீர் வாரியம் தகவல்
மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரத்தில் பணி நீக்கத்தை எதிர்த்து முன்னாள் உதவி பேராசிரியர் மனு: கலாஷேத்ரா அறக்கட்டளை பதில் தர உயர் நீதிமன்றம் உத்தரவு
சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் கழிவுநீரகற்றல் சட்டத்தில் திருத்தம்: பேரவையில் அமைச்சர் கே.என்.நேரு தாக்கல்
பிள்ளைகள் வளந்துவிட்டார்கள் என தொடர்பை துண்டித்ததால் பெண்ணை தீவைத்து கொளுத்திய கள்ளக்காதலன்: உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை, காதலன், மருமகனுக்கும் தீக்காயம்
சாலையில் திரியும் மாடுகளால் விபத்து, காயம் ஏற்பட்டால் உரிமையாளர் மீது வழக்கு: ஆலோசனை கூட்டத்தில் முடிவு