கரூர்: கரூர் வாங்கப்பாளையம் பகுதியில் உள்ள தொழிற் கூட்டுறவு சங்கத்தில் இருந்து தோகைமலை ஒன்றியத்துக்கு தேவையான பள்ளி சீருடைகள் அனுப்பும் பணி நேற்று நடைபெற்றது. கரூர் மாவட்டம் வாங்கப்பாளையத்தில் கடந்த 94ம் ஆண்டு முதல் சமூக நலத்துறையின் சார்பில், கரூர் தையல் மற்றும் சார்புத் தொழில்கள் மகளிர் மேம்பாட்டு தொழிற் கூட்டுறவு சங்கம் மூலம் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு தேவையான சீருடைகள் தைக்கப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது. இந்த சங்கத்தில் 500க்கும் மேற்பட்ட மகளிர் உறுப்பினர்களாக உள்ளனர்.
தோலைமலை ஒன்றியத்துக்கு தொழிற் கூட்டுறவு சங்கத்திலிருந்து பள்ளி சீருடைகள் அனுப்பிவைப்பு
