விராலிமலை, பிப்.19: புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அருகே மணல் கடத்தலில் ஈடுபட்ட டிப்பர் லாரியை 3 யூனிட் மணலுடன் பறிமுதல் செய்த போலீசார் வாகன ஓட்டுநர் மற்றும் அதன் உரிமையாளர் மீது வழக்கு பதிந்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.விராலிமலை மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் டிராக்டர், டிப்பர் லாரி, லோடு வாகனங்கள் மூலம் ஆற்று மணல்,கிராவல் மணல்(சரளை மண்) அள்ளப்பட்டு கடத்தப்படுவதாக போலீசாருக்கு அவ்வப்போது கிடைத்து வரும் தகவலையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிறப்பு பிரிவு போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு மணல் கடத்தலில் ஈடுபடும் வாகனங்களை பறிமுதல் செய்து வருகின்றனர்.
The post விராலிமலை கிராவல் மண் கடத்த பயன்படுத்திய லாரி பறிமுதல் டிரைவர் கைது appeared first on Dinakaran.