வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை தகவல்

சென்னை: வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு  உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும் எனவும் கூறியுள்ளது. சிவகங்கை, விருதுநகர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் மற்ற மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்யும். நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், மதுரை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழையும், ஏனைய மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்யும் என கூறியுள்ளது.நாளை மறுநாள் (9-ந்தேதி) தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், கடலூர், மயிலாடுதுறை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன மழையும், மற்ற மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும். வருகிற 10-ந்தேதி ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, புதுக்கோட்டை, திருச்சி, கரூர் மாவட்டங்களில் கன முதல் மிக கன மழையும், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், அரியலூர், பெரம்பலூர், விழுப்புரம், திருநெல்வேலி மற்றும் புதுச்சேரியில் கன மழையும் பெய்ய வாய்ப்புள்ளது. 11-ந்தேதி ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, புதுக்கோட்டை, திருச்சி, கரூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், அரியலூர், பெரம்பலூர், விழுப்புரம், நெல்லை மற்றும் புதுச்சேரியில் கன மழையும் மற்ற மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்யும்.சென்னை மற்றும் புறநகர் பகுதியை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என கூறியுள்ளது. அதிகபட்சமாக கடலூர் மாவட்டம் மே.மாத்தூர், நத்தம் தலா 21 செ.மீ., ரிஷிவந்தியம்-19செ.மீ., வேப்பூர்-18, கலயநல்லூர்-16 செ.மீ. , சங்கராபுரம்-15செ.மீ. , பிளமேடு, குடவாசல் தலா 11, பூந்தமல்லி-10 செ.மீ. , அரூர், அகரம் சீகூர், ஜெயங்கொண்டம், ராஜபாளையம், ஆட்டிப்பட்டி தலா 9செ.மீ. , திருவிடைமருதூர், தம்மம்பட்டி தலா 8 செ.மீ., புதுச்சேரி, பூண்டி, அரவக்குறிச்சி தலா 7 செ.மீ. மழை பதிவாகி உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது….

The post வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை தகவல் appeared first on Dinakaran.

Related Stories: