வருஷாபிஷேகத்தை முன்னிட்டு வைகுண்டம் கள்ளபிரான் கோயிலில் கருடசேவை

வைகுண்டம், ஜூன் 10: வைகுண்டம் கள்ளபிரான் கோயில் வருஷாபிசேகத்தை முன்னிட்டு நேற்று முன்தினம் இரவு கருடசேவை நடந்தது. வைகுண்டத்தை சுற்றிலும் ஆன்மீக சிறப்பு வாய்த நவதிருப்பதி கோயில்கள் அமைந்துள்ளன. முதலாவது திருப்பதியான வைகுண்டம் கள்ளப்பிரான் கோயிலில் சில ஆண்டுகளுக்கு முன்பு வைகாசி மாதம் திருவோண நட்சத்திரத்தில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. நேற்று முன்தினம் வைகாசி மாத திருவோண நட்சத்திரத்தில் இந்த ஆண்டு வருஷாபிஷேகம் நடந்தது. இதனை முன்னிட்டு காலை 6.30 மணிக்கு விஸ்வரூபம், 8 மணிக்கு கும்ப தீர்த்தம், 9 மணிக்கு ஹோமம் 9.30 மணிக்கு பூர்ணாகுதி, 10 மணிக்கு சிறப்பு திருமஞ்சனம், 11 மணிக்கு தீபாராதனை, நாலாயிர திவ்ய கோஷ்டி, 12 மணிக்கு சாத்துமுறை, பக்தர்களுக்கு தீர்த்தம், சடாரி, பிரசாதம் வழங்கப்பட்டது. மாலை 6 மணிக்கு சாயரட்சை, 7 மணிக்கு உற்சவர் கள்ளப்பிரான் சுவாமி வாகன குறட்டிற்கு எழுந்தருளினார். 9.30 மணிக்கு கருட வாகனத்தில் கள்ளப்பிரான் சுவாமி பக்தர்களுக்கு காட்சியளித்தார். பின்பு வீதி உலா நடந்தது. இந்நிகழ்ச்சியில் அர்ச்சகர்கள் ரமேஷ், வாசு, நாராயணன், ராமானுசம், சீனு, ஸ்தலத்தார்கள் ராஜப்பா வெங்கடாச்சாரி, சீனிவாசன், தேவராஜன், கண்ணன், நிர்வாக அதிகாரி கோவலமணிகண்டன், ஆய்வாளர் நம்பி, தக்கார் அஜீத், வக்கீல் பிரகாஷ், சீனிவாசா சேவா அறக்கட்டளை பத்மநாபன் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

The post வருஷாபிஷேகத்தை முன்னிட்டு வைகுண்டம் கள்ளபிரான் கோயிலில் கருடசேவை appeared first on Dinakaran.

Related Stories: