மூதாட்டியிடம் சங்கிலி பறிப்பு

தர்மபுரி, மார்ச் 22: தர்மபுரி மாவட்டம் பொம்மிடி அருகே கதிரிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜீ. இவரது மனைவி முனியம்மாள்(70). கடந்த 19ம் தேதி இரவு முனியம்மாள் வீட்டிற்குள் தூங்கிக் கொண்டிருந்தார். ராஜீ வீட்டின் முன் படுத்திருந்தார். கதவை பூட்டாமல் சாத்தியபடி விட்டிருந்தனர். இந்நிலையில், நள்ளிரவு நேரத்தில் அங்கு வந்த மர்மநபர் வீட்டிற்குள் புகுந்து முனியம்மாள் கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் நகையை பறித்துக்கொண்டு அங்கிருந்து தப்பினார். அவரை பிடிக்க முயன்றும் முடியவில்லை. இதுகுறித்த புகாரின்பேரில், பொம்மிடி போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

The post மூதாட்டியிடம் சங்கிலி பறிப்பு appeared first on Dinakaran.

Related Stories: