மீண்டும் மோகன்லால் பட ரீமேக்கில் சிரஞ்சீவி

சென்னை: மோகன்லால் நடித்த மலையாள பட ரீமேக்கில் மீண்டும் நடிக்கிறார் சிரஞ்சீவி. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மலையாளத்தில் வெளிவந்து வரவேற்பை பெற்ற படம் லூசிபர். பிருத்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடித்திருந்தார். தற்போது இந்த படம் தெலுங்கில் காட்பாதர் என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. மோகன்லால் கேரக்டரில் சிரஞ்சீவியும், மஞ்சு வாரியர் கேரக்டரில் நயன்தாராவும் நடித்து வருகிறார்கள். மோகன்ராஜா இயக்கி வருகிறார். இந்த நிலையில் சமீபத்தில் வெளியான புரோ டாடி படத்தின் ரீமேக்கிலும் சிரஞ்சீவி நடிக்க இருக்கிறார். இந்த படத்தையும் பிருத்விராஜ் இயக்க, மோகன்லால் நடித்திருந்தார். இந்த படம் ஓடிடி தளத்தில் வெளியானது, மாமியாரும், மருமகளும் ஒரே நேரத்தில் கர்ப்பமாக இருந்தால் என்னாகும் என்பதை காமெடியாக சொன்ன படம். இதுதவிர சிரஞ்சீவி தற்போது போலே சங்கர், ஆச்சார்யா படங்களிலும் நடித்து வருகிறார்….

The post மீண்டும் மோகன்லால் பட ரீமேக்கில் சிரஞ்சீவி appeared first on Dinakaran.

Related Stories: