மாரியம்மன் கோயில் ஆனி தேர்த்திருவிழா

அரூர், ஜூலை 7: அரூரை அடுத்த எச்.அக்ரஹாரத்தில் மாரியம்மன் கோயில் ஆனிமாத தேர்த்திருவிழா நடந்தது. அரூர் அடுத்த எச்.அக்ரஹாரத்தில் அமைந்துள்ள மாரியம்மன் கோயில் ஆனி மாத தேர்த்திருவிழா, ஜூன் 28ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து, சுவாமிக்கு தினசரி பல்வேறு சிறப்பு பூஜைகள், சுவாமி திருவீதி உலா, வாண வேடிக்கை, சுவாமி திருக்கல்யாணம், மாவிளக்கு எடுத்தல் உள்ளிட்ட சிறப்பு வழிபாடுகள் நடந்தது. இதையடுத்து, நேற்று முன்தினம் பகல் 12.30 மணியளவில், மாரியம்மன் கோயில் தேர் திருவிழா வெகு விமர்சியாக நடந்தது. விழாவில், எச்.அக்ரஹாரம், நெருப்பாண்டகுப்பம், ஆட்டியானூர் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர். விழா குழுவினர் சார்பில், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த விழாவில் அரூர் தாசில்தார் பெருமாள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

The post மாரியம்மன் கோயில் ஆனி தேர்த்திருவிழா appeared first on Dinakaran.

Related Stories: