மதுரை கலெக்டர் ஆபீசில் நடந்த மக்கள் குறைதீர் முகாமில் 395 மனுக்கள் பெறப்பட்டது

மதுரை, ஏப். 11: மதுரை கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர் முகாமில் 395 பேர் மனு கொடுத்தனர். மதுரை மாவட்ட மக்கள் குறைதீர் முகாம் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கலெக்டர் அனீஷ்சேகர் தலைமை வகித்து பொதுமக்களிடம் மனுக்களை பெற்றார். தொடர்ந்து கலெக்டர், பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்களை ஆய்வு செய்து தகுதியான மனுக்களின் மீது உடனடி நடவடிக்கை மேற்கொண்டு தீர்வு காண சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். முகாமில், பொதுமக்களிடமிருந்து இலவச வீட்டுமனைப்பட்டா கேட்டு 45 மனுக்கள், ஆக்கிரமிப்பு பகுதிகளை அகற்ற கோரி 24 மனுக்கள், சான்றுகள் நிலம் தொடர்பாக 40 மனுக்கள், குடும்ப அட்டை தொடர்பாக 12 மனுக்கள், முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, விபத்து நிவாரணத்தொகை, மாற்றுத்திறனாளி உதவித்தொகை, நலிந்தோர் நலத்திட்ட உதவித்தொகை தொடர்பாக 54 மனுக்கள், வேலைவாய்ப்பு கோரி 32 மனுக்கள், அடிப்படை வசதிகள் (சாலை, தெருவிளக்கு, தண்ணீர் குழாய்,

பேருந்து வசதி, தொகுப்பு வீடு மற்றும் இதர அடிப்படை வசதிகள்) கோரி 9 மனுக்கள், புகார் தொடர்பாக 28 மனுக்கள், கல்வி உதவித்தொகை வங்கிக்கடன் மற்றும் இதர கடன் வசதிகள் கோரி 10 மனுக்கள், திருமண உதவித்தொகை, இலவச தையல் இயந்திரம், இரண்டு பெண் குழந்தைகள் திட்டம், சலவைப்பெட்டி தொடர்பாக 7 மனுக்கள், தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம், ராஜாக்கூர் வீடுகள், பசுமை வீடுகள் தொடர்பான 63 மனுக்கள் மற்றும் இதர மனுக்கள் 72 என மொத்தம் 395 மனுக்கள் பெறப்பட்டன. கூட்டத்தில் கலெக்டர் கைத்தறி மற்றும் துணிநூல் துறையின் கீழ் 2 நெசவாளர் கூட்டுறவு சங்கங்களை சார்ந்த 3 நகர்ப்புற நெசவாளர்களுக்கு ரூ.4 லட்சம் மானியத்துடன் வீடு கட்டுவதற்கு பணி ஆணையினையும், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் 7 பயனாளிகளுக்கு வீட்டு மனைகளுக்கான கிரையப்பத்திரத்தையும் வழங்கினார். இதில் மாவட்ட வருவாய் அலுவலர் சக்திவேல், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) பிரபாகரன் மற்றும் அனைத்து துறை அரசு அலுவலர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

The post மதுரை கலெக்டர் ஆபீசில் நடந்த மக்கள் குறைதீர் முகாமில் 395 மனுக்கள் பெறப்பட்டது appeared first on Dinakaran.

Related Stories: