புதுக்கோட்டையில் சுகாதார செவிலியர் சங்கத்தினர் பெருந்திரள் முறையீடு

 

புதுக்கோட்டை,ஆக.11: அனைத்து சுகாதார செவிலியர் சங்க புதுக்கோட்டை கிளையின் சார்பில் கோரிக்கையை வலியுறுத்தி கலெக்டர் அலுவலகம் அருகில் பெருந்திரள் முறையீடு நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மலர்கொடி தலைமை தாங்கினார். அஞ்சலை முன்னிலை வகித்தார். யூவின் செயலியை தடை செய்ய வேண்டும். காலி பணியிடத்தை நிரப்ப வேண்டும். ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு ஒரு கம்யூட்டர் ஆப்ரேட்டரை நியமிக்க வேண்டும்.

பதவு உயர்வு வழங்க வேண்டும், பிரசவத்திற்கு கர்ப்பிணியை ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து வருவதை கட்டாயப்படுத்துவதை நிறுத்த வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி பெருந்திரள் முறையீடு நடைபெற்றது. இதில் மாவட்ட தலைவர் அருள்மொழி, துணை தலைவர் சசிபானு, செயலாளர் விஜயலெட்சமி, பொருளாளர் கவிதா பரியா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

The post புதுக்கோட்டையில் சுகாதார செவிலியர் சங்கத்தினர் பெருந்திரள் முறையீடு appeared first on Dinakaran.

Related Stories: