பிரான்ஸ் அதிபர் தேர்தல் புதுச்சேரி, காரைக்காலில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு

புதுச்சேரி: பிரான்ஸ் அதிபர் தேர்தலுக்கான முதல் சுற்று வாக்குப்பதிவு புதுச்சேரி, காரைக்கால் மற்றும் சென்னையில் நேற்று நடந்தது. பிரெஞ்சு குடியுரிமை பெற்ற மக்கள் நீண்ட வரிசையில் நின்று ஆர்வமுடன் வாக்களித்தனர். பிரான்ஸ் நாட்டின் அதிபரை தேர்வு செய்வதற்கான தேர்தல் 2 சுற்றுகளாக நடத்தப்படுகிறது. இத்தேர்தலில் தற்போதைய அதிபர் இம்மானுவேல் மேக்ரான் மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகளை சேர்ந்த நதாலி ஆர்தாட், நிக்கோலஸ் டூபோன்ட், ஆன் ஹிடால்கோ, யானிக்ஜடோட், ஜீன்லஸ்ஸல், மரைன்லுபென் உள்பட 12 பேர் களத்தில் உள்ளனர். உலகம் முழுவதும் உள்ள பிரான்ஸ் குடிமையுரிமை பெற்றவர்கள் வாக்களிக்க தகுதியானவர். அந்த வகையில், புதுச்சேரி, தமிழகம், கேரளாவில் 18 வயது நிரம்பிய பிரான்ஸ் குடியுரிமை பெற்ற வாக்காளர்கள் 4,564 பேர்  உள்ளனர். இந்நிலையில் பிரான்ஸ் அதிபர் தேர்தலுக்கான முதல் சுற்று வாக்குப்பதிவு நேற்று நடந்தது. இதன் ஒரு பகுதியாக, புதுச்சேரியில் உள்ள பிரெஞ்சு துணை தூதரகம், லிசே பிரான்சே பள்ளி ஆகிய 2 வாக்குச்சாவடிகள், காரைக்கால் மற்றும் சென்னையில் தலா ஒரு வாக்குச்சாவடி என 4 வாக்குச்சாவடிகளில் நேற்று காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு துவங்கியது. இதில் பிரான்ஸ் குடியுரிமை பெற்றவர்கள் நீண்ட வரிசையில் நின்று தங்களது குடியுரிமை அட்டையை காண்பித்து ஆர்வமுடன் வாக்களித்தனர். மாலை 7 மணிக்கு வாக்குப்பதிவு நிறைவடைந்தது. தொடர்ந்து, பதிவான வாக்குகள் அந்தந்த மையங்களில் எண்ணப்பட்டு, பிரான்ஸ் நாட்டுக்கு தெரிவிக்கப்படும். இந்த வாக்குச்சாவடி மையங்களை பிரெஞ்சு துணை தூதர் லிசே டல்போர்ட் பரே பார்வையிட்டார். மேலும், அசம்பாவித சம்பவங்களை தடுக்க வாக்குச்சாவடி மையங்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். முதல் சுற்று தேர்தல் முடிவில் எந்த வேட்பாளரும் பெரும்பான்மை பெறவில்லை என்றால், முதல் இரண்டு இடங்களை பெறுவோருக்கு இடையே இரண்டாவது சுற்று தேர்தல் வரும் ஏப்.24ம் தேதி நடைபெறும். …

The post பிரான்ஸ் அதிபர் தேர்தல் புதுச்சேரி, காரைக்காலில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு appeared first on Dinakaran.

Related Stories: