பழநி தொப்பம்பட்டியில் இணைவோம் மகிழ்வோம் முகாம்

பழநி, மார்ச் 7: பழநி அருகே தொப்பம்பட்டி வட்டார வளமையத்தில் ஒருங்கிணைந்த கல்வி திட்டத்தின் கீழ் மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கான இணைவோம் மகிழ்வோம் திட்ட முகாம் நடந்தது. வட்ட வள மைய பொறுப்பு அலுவலர் பழனிச்சாமி தலைமை வகித்தார். வட்டார கல்வி அலுவலர்கள் பிரிட்டோ, யசோதா முன்னிலை வகித்தனர். ஆசிரியர் பயிற்றுநர் ராஜசேகரன் வரவேற்று பேசினார். முகாமில் மாற்றுத்திறன் குழந்தைகளுக்கு புதிர் விளையாட்டு, நடித்து விளையாடுதல், பலூன் விளையாட்டு போன்றவை நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இதில் ஆசிரியர் பயிற்றுநர், சிறப்பாசிரியர்கள், கணக்காளர்கள், தன்னார்வலர்கள், பெற்றோர்கள் என பலர் கலந்து கொண்டனர். ஆசிரியர் பயிற்றுநர் ரகுராமன் நன்றி கூறினார்.

The post பழநி தொப்பம்பட்டியில் இணைவோம் மகிழ்வோம் முகாம் appeared first on Dinakaran.

Related Stories: