பருத்தி பயிரை தாக்கும் சிவப்பு நாவாய் பூச்சிகள்-கட்டுப்படுத்த விவசாயிகளுக்கு ஆலோசனை

நீடாமங்கலம் : பருத்தி பயிரை தாக்கக் கூடிய சிவப்பு நாவாய்ப்பூச்சிகளை கட்டுப்படுத்துவது குறித்து நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர் ராதாகிருஷ்ணன் விளக்கமளித்துள்ளார்.இதுகுறித்து முனைவர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளதாவது:சிவப்பு நாவாய்ப்பூச்சி: பருத்திக் காய்களில் உள்ள சாற்றை இளம்பூச்சிகளும், வளர்ந்த பூச்சிகளும் உறிஞ்சும் தன்மையுடைது. இதனால் காய்களின் வளர்ச்சி பாதிக்கப்பட்டு பஞ்சு பழுப்பு நிறமாக மாறி, காயின் உள்ளே நீரில் ஊறிய புள்ளிகள் போல் இருப்பதைப் பார்க்கலாம். மேலும் இளம் காய்கள் சரியாக உருவாகாமல், பழுப்பு நிறமாக மாறி இருப்பதையும், பஞ்சு கறை பிடித்து காய்கள் அழுகியும் இருக்கும். நாவாய்ப் பூச்சியினால் பாதிக்கப்பட்ட விதைகளை விதைக்காகவோ, எண்ணெய் எடுப்பதற்கோ, கால்நடை தீவனத்திற்கோ, பயன்படுத்த முடியாது. சிறிய நாவாய்ப் பூச்சிகள் வெடித்த காய்களில் பஞ்சின்மேல் அமர்ந்து சாற்றை உறிஞ்சி கழிவுகளை பஞ்சின்மேல் விடுவதால் கறை படிந்து போய்விடும்.ஒருங்கிணைந்த மேலாண்மை முறைகள்:பருத்திக்குப் பிறகு தொடர்ந்து பருத்தி பயிரிடுவதைத் தவிர்க்க வேண்டும். ஒரு ஏக்கருக்கு ஒரு விளக்குப் பொறி வைத்து (இரவு 7 மணி முதல் 9.30 மணி வரை) நாவாய் பூச்சிகளை அழிக்கலாம். தாவர பூச்சிக்கொல்லிகளான வேப்ப எண்ணெய் 2 சதம் அல்லது வேப்பங்கொட்டை கரைசல் 5 சதம் ஒரு லிட்டர் தண்ணீருடன் கலந்து தெளிக்க வேண்டும். செயற்கை பூச்சிக்கொல்லிகளில் கீழ்கண்டவற்றில் ஏதாவது ஒன்றை ஒரு ஹெக்டேருக்கு தெளித்து கட்டுப்படுத்தலாம்.1. இமிடாகுளோபிரிட் 200 எஸ்.எல். 100 மில்லி,2. அசிடமிபிரிட் 20 எஸ்.பி. 50 கிராம்3. பிப்ரோனில் 5 எஸ்.சி. 1500- 2000 மில்லி,மேற்கண்ட பூச்சிக்கொல்லிகளுடன் ஒரு ஹெக்டேருக்கு 500 லிட்டர் தண்ணீர் கலந்து கைத்தெளிப்பான் மூலம் காலை அல்லது மாலை நேரத்தில் தெளித்து கட்டுப்படுத்தலாம். இவ்வாறு நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர் ராதாகிருஷ்ணன் விளக்கமளித்துள்ளார்….

The post பருத்தி பயிரை தாக்கும் சிவப்பு நாவாய் பூச்சிகள்-கட்டுப்படுத்த விவசாயிகளுக்கு ஆலோசனை appeared first on Dinakaran.

Related Stories: